Wednesday 18 February 2015

மூலிகை செடிகளும் அதன் பயன்களும்

மூலிகை செடிகளும் அதன் பயன்களும்

தொட்டாற்சுருங்கி

காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்கள் தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 

தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி. தெய்வீக மூலிகை ‘நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது. தெய்வீக மூலிகையான இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் ‘காமவர்த்தினி' என்றும் கூறுவர். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கம் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும். சிறுநீர் கல் கரையும் தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும். ஆண்மை பெருகும் ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். மூலநோய் நீங்கும் இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும்.


*************************************************************************

                                                        ஆவாரை
தாவரவியல் பெயர் Cassia auriculata Linn
அமைப்பு
நன்கு வளரும் செடி பட்டை காவி நிறமுடையது. துவர்ப்பானது. பூக்கள் பொன்னிறம் உடையது. காய்கள் செம்பு நிறமுடையவை. தட்டையானவை.


பயன்படும் பாகம்
முழுச்செடி (பஞ்சாங்கம்)
மருத்துவப்பயன்
இலை, பூ, வித்து, பட்டை, வேர் இவைகளைத் தனித்தனியாக ஒன்றிரண்டாக இடித்துச் சேர்த்து கசாயம் போட்டுக்குடித்துவர நீரிழிவு நோய் குணமாகிறது. இதனை ஆறாத புண்களுக்கும், எலும்புச்சுரத்திற்கும் கொடுக்க நல்லபலன் கிடைக்கும். இலை மற்றும் பூவை பச்சையாக அரைத்து தேய்த்துக்குளிக்க வெப்பம் தணிகிறது. சரும நோய்கள் அணுகாது. அம்மை நோய் உள்ளவர்களுக்கு இலையைக்கொண்டு வருட நமைச்சல் குறைகிறது. பட்டையை கசாயம் செய்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண், வாய் துர்நாற்றம் குணமாகிறது. பற்கள் பலப்படுகிறது. பட்டையில் அதிக அளவு டானின் சத்துள்ளது.
கிடைக்குமிடம்
வெற்றுத்தரிசு நிலங்களில் தானாக வளர்ந்திருக்கும்.

 *********************************************************************************

கறிவேப்பிலை
அமைப்பு
சிறிய மரம். இலை மிகவும் பசுமையானது. பூக்கள் வெள்ளை நிறம் கொண்டது. காய்கள் பழுத்தால் கருநீலமாகும். இலைக்கு நல்ல வாசனை உண்டு.
பயன்படும் பாகம்: இலை


 

மருத்துவப்பயன்
இலையை குழம்புகள் மற்றும் தாளிசம் செய்ய பயன்படுத்துகிறோம். இலையை சீரகத்துடன் சேர்த்து அரைத்து ஒரு நெல்லிக்காயளவு மோரில் கலக்கி குடித்தால் அசீரணத்தால் உண்டாகும் பேதி சீதபேதி உடனே கட்டுப்படுகிறது. இலையை பொடித்து சோற்றில் கலந்து சாப்பிட்டு வர கொழுப்புச்சத்து உடலில் மிகாது. இதனால் அதிக இரத்த அழுத்தம் ஏற்படாது. இவ்விலையுடன் மருதோன்றி இலையைச் சேர்த்து எண்ணெய் காய்ச்சி தலைமுழுகிவர தலைமுடிகள் உதிர்வது நிற்கிறது.
கிடைக்குமிடம்
சாதாரணமாக வீட்டுத்தோட்டத்தில் இலைக்காக வளர்க்கப்படுகிறது. தோட்டப்பயிராகவும் சில இடங்களில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. விதைகளை நடவு செய்து கன்றுகள் உற்பத்தி செய்யவேண்டும்.



  

அறுகம்புல் மருத்துவப்பயன்


அறுகம்புல்லின் தாவரவியல் பெயர் Cynodon dactylon 
இது ஒரு படரும் புல் வகையைச்சார்ந்தது. வேர்கள் ஆழமாகச்செல்லும் தாள் (இலை) சொரசொரப்பானதுசுத்தம் செய்த அறுகம்புல்லை இடித்துப் பிழிந்தச்சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்துவர சிறுநீர் நன்றாகக் கழிகிறது. உடல் வீக்கம் குறைகிறது. வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. இரத்தம் சுத்தியடைகிறது. அறுகம்புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்துத் தைலமாகக் காய்ச்சி ஆறாத விரணங்கள் படை சிரங்கு வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டுப்போட அவைகள் விரைவில் குணமாகிறது. வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்துவர பெண்களுக்கு ஏற்படும் சூதகக்கசிவு நீங்குகிறது. மனச்சோர்வு தூக்கமின்மை வலிப்புக்கும் அறுகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.  


**********************************************************************************
                                               பூனை வணங்கி
    சாதாரணமாக விலங்குகள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலிகைக்கு கட்டுப்பட்டு நிற்கும். மதம் கொண்ட யானை முதல் சாதுவான பூனை வரை இதற்கு விதிவிலக்கல்ல. கொடூரமான புலி, சிங்கம் உட்பட பல மிருகங்களும் தங்கள் உடலை வளைத்து நெளித்து சமன் செய்து கொள்ளும். புலி போன்ற தோற்றம் உடைய பூனை மிகுந்த சாதுவான மிருகம். ஆனாலும் எவ்வளவு பழகினாலும் சில நேரங்களில் சீறும் குணம் கொண்டது. அதனை கட்டுப்படுத்தும் மூலிகைதான் பூனை வணங்கி. இந்த மூலிகை அருகே பூனை செல்லாது.
    தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளரும். முக்கோண வடிவ இலை ஓரங்களில் அரும்பு அரும்பாக இருக்கும். சிறு செடியான இதன் இலை. இடுக்குகளில் வெண்மை நிறப்பூக்களும், மிளகு அளவிலான காய்களும் இருக்கும். அதிமஞ்சரி, அண்டகம், அக்கினி சிவன், பூனை வணங்கி, அனந்தம் என பல்வேறு பெயர்களில் இந்த மூலிகைச்செடி அழைக்கப்படுகிறது.
    இந்த மூலிகை செடியின் கீரையை (இலை) ஆமணக்கு எண்ணெய்யில் தாளித்து 48 நாட்கள் தொடர்ந்து சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்வு தொடர்பான பல்வேறு நோய்களும் நம்மை விட்டு போகும். இதன் சாற்றை எடுத்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 தேக்கரண்டி அளவு கொடுத்தால் வயிற்றை கழியச்செய்து கோழையை அகற்றி வயிற்றில் உள்ள புழுக்களை கொல்லும். மாந்திரீக மூலிகையான இது அனைவரையும் வசீகரப்படுத்தும். கோழை நீக்குதல், இருமலை கட்டுப்படுத்துதல், விஷக்கடி, ரத்தமூலம், வாதம், நமைச்சல், ஆஸ்துமா, குடல்புழுக்கள், மூட்டுவலி, தலைவலி, மலமிளக்கி என பலவற்றுக்கும் நிவாரணியாக இந்த இலை உள்ளது. இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டினால் படுக்கை புண்கள் ஆறும். இதன் இலையில் மஞ்சள் மற்றும் கல் உப்பு கலந்து அரைத்து போட்டால் அனைத்து வகை சொறி சிரங்குகளும் தீரும். வேருடன் செடியை பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 முதல் 5 கிராம் வரை பசு நெய்யில் கலந்து காலை மாலை வேளைகளில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் 18 வகையான மூலம் தீரும். மோரில் கலந்தும் குடிக்கலாம். இந்த மருந்தை சாப்பிடும்போது புளி, காரம் போன்றவற்றை சமையலில் நீக்கினால் சிறப்பான பலன் கிடைக்கும். வேர் சூரணம் 1 பிடி இலை ஆகியவற்றை 1 லிட்டர் நீரில் போட்டு 8 ல் ஒரு பங்காக காய்ச்சி குடித்தால் கீரி பூச்சி, நாடாப்புழு, நாக்குப்பூச்சி நீங்கும். பேதியாகும் தன்மை கொண்டது. எனவே சிறுவர்களுக்கு பாதியளவு கொடுக்கவேண்டும். இலை சாற்றில் உப்பு, சுண்ணாம்பு கலந்து ஆமணக்கு எண்ணெய்யுடன் தடவினால் மேகப்புண் ஆறும். இலை பொடியை மூக்குப்பொடி போல் போட்டுக்கொண்டால் தலைவலி தீரும். முழு செடியையும் காய வைத்து சூரணம் செய்து சிட்டிகை அளவு காலை மாலை ஒரு மண்டலம் (48 நாள்) சாப்பிட்டால் பவித்தரம் தீரும். முழங்கால் வலி இருந்தால் இதன் வேரை அரைத்து அதனுடன் சமஅளவு சுண்ணாம்பு, வசம்பு, கருப்பட்டி சேர்த்து பற்று போட்டு வந்தால் வலி பறந்து போகும். இத்தகைய சிறப்புகளை கொண்ட பூனை வணங்கியை எங்கே போய் தேடுவது?
    


    பூனை வணங்கி என்றால் எந்த செடி? என எண்ணி குழம்ப வேண்டாம். எங்கும் பரவிக்கிடக்கும் குப்பைமேனி செடிதான் அது. முன்னோர் கண்டறிந்து கூறிய குப்பைமேனியை பயன்படுத்தி குப்பையாக மாறும் மேனியை பயனுடையதாக்கி நலமுடன் வாழ்வோம்.
நன்றி: தினகரன்

***********************************************************************************

துளசி

* துளசி இலைகளை, வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டால், பூச்சி, வண்டுக்கடி காரணமாக ஏற்படும் விஷம் மாறும்.



* துளசி இலைகளை காய வைத்து இடித்து, தயார் செய்த கஷாயத்துடன், தேன், பசுவின் பால் கலந்து உண்டால், கணையச் சூடு அகலும்.


* துளசி சாற்றில், சம அளவு தேன் கலந்து, ஐந்து நாட்கள் உட்கொள்ள, வாயு தொடர்பாக ஏற்படும் நோய்கள் குணமாகு
ம்

Tuesday 17 February 2015

சீறுநீர் கல்லடைப்பு

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.
ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பகிருங்கள்.!
சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
மனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர். மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து விட்டது. இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து,மருந்தே உணவு என்ற நோக்கத்தில் நாம் இதை இப்போது தூசு தட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அனைத்து சித்தர்களின் ஆசியும் நடத்துதலும் எங்களுக்கு தேவை.
பெ.முத்துகிருஷ்ணன் >>> http://goo.gl/jj18aM படத்தில் மேலே காணப்படும் நபர் பெயர் பெ.முத்துகிருஷ்ணன் இவர் ஒரு விவசாயி சொந்த ஊர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். கடந்த மாதம் இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் பெரும் அவதிபட்டார். சிறுநீர் கழிக்க முடியாமல் மருத்துவமனைக்கே செல்லாத இந்த நபர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் (Scan) செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர். இவர் மேலும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கும் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். இரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள் கழித்து வைத்து கொள்லலாம் அதுவரை இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற கூறி மருத்துவர் இவரை அனுப்பி விட்டனர்.
அடுத்த நாள் காலையில் நாம் இவரை சந்தித்தோம் சிறுநீர் கழிக்க முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம் பார்க்க முடியாமல் ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது. அதாவது குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.
நோண்டி எடுக்கப்பட்ட வாழை >>> http://goo.gl/MweGCq
இப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.
அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும்.
நீர் நிரம்பிய நிலையில் வாழை >>> http://goo.gl/fZtBlH
அதனை அப்படியே உறிஞ்சி குடிக்கும் குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது. சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.
மேலே நாம் கூறியது போலவே நண்பர் முத்துகிருஷ்ணன் முந்தைய நாள் இரவு வெட்டி வைத்துள்ளார். விடியும் வரை வலியால் தூங்காமல் அவதிப்பட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு சாற்றை குடித்துள்ளார். சரியாக 9 மணிக்கு தண்ணீரும் குடித்துள்ளார். வலி குறையத்தொடங்கியதை உணர்ந்திருக்கிறார். சரியாக மதியம் 1 மணிக்கு வலி சுத்தமாக அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும் போது இருந்த வலி அவரிடம் இப்போது இல்லை.
இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடிக்கும்படி கூறினோம் 5 நாள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்னும் பல மருத்துவ தகவல்களுக்கு இணைந்திருங்கள்.!
------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்
http://tunein.com/radio/Puradsi-Fm-s172414/
புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!!
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். www.facebook.com/puradsifm
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
**சோற்று கற்றாழை 400 கிராம்
**சுத்தமான தேன் 500 கிராம்
**whisky (or) brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
------------------------
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது.
மருந்தை உட்கொள்ளும் விதம்
----------------------------------------------
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும்.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு
நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும்.
மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்
--------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்
http://tunein.com/radio/Puradsi-Fm-s172414/
www.facebook.com/puradsifm

Sunday 15 February 2015

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

Print PDF
 அருகம்புல்லும் வேரும்
உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும்.

அரசு
கர்பப்பை கோளாறு, மலட்டுத் தன்மை நீக்கும், சூட்டைக் குறைப்பது, சுரம்போக்கும், வீக்கம் குறைக்கும்.


அத்தி
மலமிளக்கி, காமம் பெருக்கு, நீரிழிவு, மூட்டுவலி, இரத்தமூலம் பெரும்பாடு.

அதிமதுரம்
காமாலை நோய், வெண்குஷ்டம், எலும்பு நோய், விக்கல், மார்புச்சளி, தும்மல், இருமல் போக்கும்.

அத்தி
மலச்சிக்கல், கால், மார்பு எரிச்சல், நீர்கடுப்பு அகற்றும்.

அமுக்ரா
அசதி, பசி இன்மை, முதுமை நீக்கம், காமம் பெருக்கும், சக்தி தரும்

ஆடாதொடை
இரத்தவாந்தி, சளிநோய், இசிவு நோய், கோழை இருமல், ஆஷ்துமா, சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.

அம்மான் பச்சரிசி
நமைச்சல், தாய்ப்பால் அதிகரிப்பு, வீக்கம், வயிற்றுவலி, சிறுநீரில் போகும் இரத்தம் குணமாகும்.

ஆடு தீண்டாப் பாளை
பலமும் விந்தும் உண்டாகும். மாதவிலக்கைத் தூண்டும், தோல் நோய், மலச்சிக்கல், பூச்சி விஷம் நீக்கும். புண்கள் ஆறும். வாதநோய் நீங்கும். ஆஷ்துமா அகலும்.

ஓரிதழ் தாமரை
காமம் பெருக்கும், சிறுநீர் எரிச்சல், சிற்றின்ப பலவீனம் நீங்கும். சுரம், தலைவலி, வெள்ளை வெட்டைச் சூடு நீங்கும்.

கடுக்காய்
மலச்சிக்கல், பல், கண், காது, மூக்கு தொண்டை நோய்கள், பசியின்மை இரத்த மூலம், ஆண்மை இன்மை, அசதி நீங்கும்.

கல்யாண முருங்கை
மாதவிடாய் கோளாறு நீங்கும், அதிக எடையைக் குறைக்கும்.

கழற்சிக்காய்
அண்டவாய்வு, விதைவீக்கம் குறைக்கும்.

கண்டங்கத்திரி
மார்புச்சளி, தொண்டை கரகரப்பு, நுரையீரல் நோய்கள், பல்வலி போகும்.

கீழாநெல்லி
காமாலை, ஈரல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி
உண்டாகும்.

குப்பை மேனி
மார்புச்சளி, தோல் நோய்கள் போக்கும்.

குமரி இலை
வெள்ளை, வெட்டை சூடு, மலச்சிக்கல் போக்கும். உடல் குளிர்ச்சி
உண்டாகும்.

கோரைக் கிழங்கு
புத்திக் கூர்மை, முடி பக்குவப்படும்.

வல்லாரை
உடல் வலுபெறும், புத்தக் கூர்மைப்படும், நீர் பெருக்கி, மேகப்புண், கட்டி வீக்கம், விரை வீக்கம், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

சிறு குறிஞ்சான்
சர்க்கரை நோய், குணமாகும். கிருமி நாசினியாகப் பயன்படும்.

மணத்தக்காளி
உடல் உரமாக்கும், கோழை அகற்றும், வாய்ப்புண், கடவாய்ப்புண், இருமல், வயிற்றுப்புண், பாண்டு, பெருவயிறு நீங்கும்.

துளசி
சளி, இருமல் நீங்கும், காய்ச்சல், பசி இன்மை, கோபம், வெறி, தூக்கமின்மை நீங்கும்.

பொடுதலை
தலைப் பொடுகு நீங்கும்.

தாமரை
மார்பு இதய நோய் போகும்.

தான்றிக்காய்
பல்நோய் போகும், மலச்சிக்கல் நீங்கும், உடல் பலம் பெரும்.

துத்தி
மூலம், புழுப்பட்டபுண் குணம்பெற மலமிளக்கி, சிறுநீர் பெருக்கி, காமம் உண்டாக்கும்.

தும்பை
கோழை அகற்றும், தலைவலி, அசதி, இருமல், வெள்ளை, தாகம், நஞ்சு நீக்கும்.

தூதுவளை
மார்புச்சளி, காசம், இருமல், இரைப்பு, உடல் குத்தல், மந்தம் நீக்கும், ஆண்மை பெருக்கும், நரம்பு வலுப்பெறும்.

நஞ்சறுப்பான்
எல்லாவித நஞ்சும் நீங்கும், சளி கக்குவான் இருமல், வாய்வு பிடிப்பு குணமாகும், பூரம், வீரம், எட்டி, பாதரச விஷங்கள் நீங்கும்.

நாயுருவி
பல்நோய், வியர்வை, படை, தேமல், இரத்தமூலம், பேதி, இருமல், வெள்ளை, சிறுநீர் சிக்கல், சூதகத் தடை நீங்கும்.

நாவல்
பேதி, சீதபேதி, இரத்த பேதி, மதுமேகம், அதிமூத்திரம் தீரும், நீரிழிவு நீங்கும்.

நீர் வேம்பு
சுரங்கள் நீங்கும், விஷம் நீங்கும், தோல்நோய் போகும்.

நீர்முள்ளி
நீர்க்கட்டு, கால்வீக்கம், பாண்டு, வெள்ளை உடல் அசதி, பெரு வயிறு, நீர் எரிச்சல் நீங்கும்.

நெரிஞ்சில்
குளிர்ச்சி உண்டாக்கும், சிறுநீர் பெருக்கும், காமம் பெருக்கும், சிறுநீர் கல்லடைப்பு, சிறுநீர் சதயடைப்பு, சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

நெல்லி
அழகுண்டாகும், குளிர்ச்சியாகும், மலமிளக்கும், சிறுநீர் பெருக்கும், வாந்தி, மயக்கம், தலைச்சுற்று, பிரமேகம் போகும்.

நொச்சி
கிருமி நாசினி, காய்ச்சல், குளிர்சுரம், வீக்கம், கீல்வாயு நீங்கும்.

நீர் பிரம்மி
மூளை வளர்ச்சியடையச் செய்யும், ஞாபக சக்தி உண்டாக்கும், காமம் பெருக்கும், கோழையகற்றும்.

பிரண்டை
உடல் உரமாக்கி, பசித்தூண்டி, மூலம் மந்தம், குன்மம், கழிச்சல், அஜீரணம், வயிற்றுவலி, இருமல், எலும்பு சக்தி பெறும்.

பூவரசு
உடல் உரமாக்கி, சொறி, சிரங்கு, கரப்பான் நீங்கும், கிருமி நாசினி, வீக்கம் நீங்கும், தோல் நோய் குணமாகும்.

பொன்னாங்கண்ணி
பசி உண்டாக்கும், கண்பார்வை கூட்டும், அழகு அதிகரிக்கும், எடை கூடும்.

மருதம்பட்டை
இரத்த அழுத்தம், நீரிழிவு, வெட்டை குணமாகும்.

மாவில்வம்
நீரிழிவு, கண்பார்வை மங்கல் குணமாகும்.

முசுமுசுக்கை
சளியைக் கரைக்கும், உடல் உரமாக்கும்.

முடக்கு அற்றான்
வாய்வு, இடுப்பு வலி, முழங்கால் வலி நீங்கும்.

முருங்கை
அதிக இரத்த அழுத்தம் குணமாகும், காமம் பெருக்கும், உடல் உரமாக்கும்.

மூக்கரட்டை
சிறு நீரகக் கோளாறு நீங்கும், கட்டி கரையும்.

வசம்பு
பசி உண்டாக்கும், இரத்தபித்தம், வாய் நாற்றம், சூலை, இருமல், ஈரல், யானைக்கால் நோய், நஞ்சு, நாடாப்புழு நீங்கும்.

வில்வம்
வியர்வை பெருக்கும், காமம் பெருக்கும், சுரம் நீங்கும் பெரும்பாடு, உடல்வலி நீங்கும்.

வேம்பு
புழுக்கொல்லி, பெருநோய், அம்மைப்புண், சொறிசிரங்கு,பித்தம், காமாலை, முற்றிலும் எல்லா நோய்களுக்கும் கொடுக்கலாம்.

கறிவேப்பிலை
இரும்புச் சத்து உள்ளது, பசித் தூண்டும், சீதபேதி, வயிற்றுளைச்சல் நீங்கும், முடிகறுக்கும்.

நன்றி :RAJKUMAR.R